| ஒழிபியல் - நூற்பா எண். 22 | 289 |
சார்ந்த சொல்லாவது - இடைப்பிறவரல் சூத்திரத்து உதாரணங்களாம். இனி, தூரான்வயத்துள் பதத்தோடு பதம் பிரித்துக் கூட்டலன்றி, விகுதியைப் பிரித்தும், உம்மையைப் பிரித்தும், விபத்தியைப் பிரித்தும், பண்பைப் பிரித்தும் கூட்டுவர். எ-டு: ‘பொறிநுதல் வெயர்த்தல்’ - தொ, பொ. 261 ‘அறம் சொல்லும் நெஞ்சத்தான்’ - கு. 185 ‘அருங்கேடன்’ - கு. 210 ‘அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்(து) இன்புற்றார் எய்தும் சிறப்பு’ - கு. 75 செய்த வேள்வியர், ‘பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்தோங்கு உயர்கொடிச் சேவ லோயே’ - பரிபாடல் 3: 17,8
இவற்றுள், வெயர்ப்பொறித்த நுதலாதல் - நெஞ்சோடு அறம் சொல்வான் - கேடு அரியன் - அன்புற்றார் - வேள்வி செய்தவர் - கொடியோர் என விகுதி பிரித்தல் வரும். 'புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே’ - தொ. எ. 35 இதனுள் நிலையிடையும் குறுகல் உரித்தே எனவும், ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று’ - கு. 100 இதனுள் இனிய கனி, இன்னாத காய் எனவும், ‘மீகண் - கீழ்நீர் - ‘செல்வத்துள் எல்லாம் தலை’ - கு. 411 இவற்றுள் கண்மீ - நீர்க்கீழ் - எல்லாவற்றுள்ளும் தலை எனவும், ‘நடுவூருள் நச்சுமரம்’ - கு. 1008 இதனுள் ஊர் நடுவுள் எனவும் முறையே உம்மையும் பண்பும் உருபும் பிரித்தல் வரும். அநுஷங்கம் என்னும் அதிகாரத்தால் பிரித்தலும் கொள்க’. - பி. வி. 19 உரை |