பக்கம் எண் :

334இலக்கணக் கொத்து 

இங்கு, அராக தத்துவம் ஆசைதனைப் பெருக்குவிக்கும்; நியதி தத்துவம் நிச்சயித்து நிறுத்தும்; இறைசக்தி எல்லை, பலம் புதுமை உறுவிக்கும் - என்ற தனித்தனித் தொடர்கள்மூன்று இச் சிவப்பிரகாசப் பாடலில் கூறப்பட்டமை பல தொடருக்கு எடுத்துக்காட்டாம்] 38

எழுத்துச் சொற்பொருட் டிரிபு

125எழுத்துச் சொல்திரிபு இரண்டே அன்றிப்
பொருள்திரிபு எங்கும் பொருந்தும் என்ப.

எ-டு: பொன் குடம் - பொற்குடம்; மாகி - மாசி; தீயேன் - தியேன்; ஆறுமுகம் - அறுமுகம் எனவும்,

உடுத்து-உடீஇ; வெல்க-வென்றீக; எல்லாப்பொருளும்-எப்பொருளும்; கழுவாத கால் - கழாஅக்கால்; பரிய அரை - பராரை; மராவத்து - மராத்து;தெரிவான் - தெரிகிற்பான்; காண்பான் - காண்கிற்பான் எனவும் வரும்.

இவை போல்வனஎல்லாம் எழுத்துத்திரிபும் சொல் திரிபும் என்க.

இனி, பொருள்திரிபு வருமாறு:

‘பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மை’                            - கு. 907

இது ஒழுகுவான் என்னும் முற்றினது பொருள் தன்நிலை திரிந்து பெயரெச்சத்தின்கண்ணே சென்றது.

‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து'                                       - கு. 1128

இது அஞ்சுவன் என்னும் ஒருமை முற்றினது பொருள் அவ்வாறு திரிந்து பன்மை முற்றின்கண்ணே சென்றது.

‘தானும் தேரும் பாகனும் வந்து என் நலன் உண்டான்’

-இது பன்மை முற்றினது பொருள் ஒருமை முற்றின்கண்ணே சென்றது.