பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31,305

4ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறு ஆகியும்

[வி-ரை: ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறாகியும் இயலுவதாவது, முதற்சொல் ஏற்கும் வேற்றுமை உருபு வேறுபடுவது போல முடிக்கும் சொல்லும் வேறாக அமையவும், அவ்வுருபும்முடிக்குஞ்சொல்லும் ஆகியவற்றின் பொருளை உள்ளடக்கி, அம்முதற்சொல்லோடு விகுதியொன்று சேர்ந்து பகுபதமாகி அத்தொடர்ப் பொருளைக் குறிப்பதாம்.

கணக்கான் முயன்று உண்பவன் - கணக்கன்,

ஆரூர்க்கு இறைவன் - ஆரூரன்,

சிவனது சமயம் - சைவம்,

தம்முடைய உறவினன் - தமன்

உருபு வேறுபடுந்தோறும் முடிக்குஞ் சொல்லும் வேறாதல் காண்க.]

குழையினை அணிந்தவன் - குழையன்,

தமிழைச் சொல்லுவான் - தமிழன்,

பொன்னை உடையான் - பொன்னன்.

மருந்தினைக் கூட்டுவான் - மருத்துவன்,

கூத்தினைப் பயின்றவன் - கூத்தன்,

மூன்று என்னும் எண்ணைப் பெற்றவர் - மூவர்

எனவும்,

தொல்காப்பியனால் செய்யப்பட்ட நூல் - தொல்காப்பியம், (அகத்தியம், அவிநயம் முதலானதும் அது)

கணக்கான் முயன்று உண்பவன் - கணக்கன்.

ஆற்றலால் வென்றவன் - ஆற்றலான்,

மானத்தால் கெட்டவன் - மானி’

காமத்தால் மயங்கினவன் - காமி,

பிணியான் வருந்துகின்றன்வன் - பிணியன்,

எனவும்,