பக்கம் எண் :

306இலக்கணக் கொத்து 

ஆரூர்க்கு இறைவன் - ஆரூரன்,

சிவனுக்கு அடியவன் - சைவன்,

பகவற்குப் பாடியாடினான் - பாகவதன்,

அரசற்கு மகள் - அரசி,

எனவும்,

வடக்கின்நின்றும் வந்தவன் - வடமன்,

வாணிகத்தின் ஆயினான் - வாணிகன்

எனவும்,

சிவனது சமயம் - சைவம்.

கோட்டது நுனி - கோட்டது,

எழுத்தினது இலக்கணம் - எழுத்தது,

சூத்திரத்தினது பொருள் - சூத்திரத்தது,

குழலினது ஓசை - குழலது,

[தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர் என்ற பன்னிரு கிளைப்பெயரும் அது] எனவும்,

மதுரைக்கண் இருந்தவன் - மதுரையான்,

விசாகநாளில் பிறந்தவன் - விசாகன்,

அரச குலத்தில் பிறந்தவன் - அரசன்,

அம்பலத்தில் ஆடினவன் - அம்பலவன்,

எனவும், வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்று வெவ்வேறாயின.

5இதனை உடையது இதுஎன நின்றும்


6இதனது உடைமை இதுஎன நின்றும்

இதனை உடையது இது, இதனது உடைமை இது - இவ் விரண்டனையும் திணைபால் இடங்கள்தோறும் ஒட்டி, இவற்றிற்கு உதாரணம் முன்னும் பின்னும் காட்டியவற்றுள் காண்க.