‘மாழைமென் நோக்கி, இடையாய்க் கழிந்தது வந்துவந்தே’ - கோவை. 61 ‘அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்’ - நாலடி. 213 என்பன ஒன்றுபல அடுக்கல். ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்’ - கு. 1101 என்புழி வேறுபல அடுக்கல். இன்னும் அச் சேடத்தால்’ ‘சென்றது சென்றது வாழ்நாள்’ - நாலடி. 4 வந்தது வந்தது கூற்று’ - நாலடி. 4 என முற்றுச் சொல்லும், ‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’ - கு. 114 ‘எப்பொருள் யாய்யார்வாய்க் கேட்பினும்' - கு. 423 ‘அர் ஆர் பவ்வூர் அகரம்’ - ந. 327 படை படை - தீத்தீ - எனப் பெயர்களும் அடுக்கி, மக்கள் இரட்டை - விலங்கு இரட்டை போல வரும். இன்னும் அதனானே, ‘துடிதுடித்துத் துள்ளி வரும்’ ‘கலகல கூஉந்துணை யல்லது’ - நாலடி. 140 ‘வற்றிய ஓலை கலகலக்கும்’ - நாலடி. 256 ‘சலசல மும்மதம் சொரிய’ - சீவக. 82 ‘பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்’ - நாலடி. 251 ‘புன்னம் புலரி’ ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ - புறநா. 168 ‘வயிறு மொடுமொடுத்தது’ ‘சிற்றஞ் சிறுகாலே’ - திவ். பிர. 502 ‘செக்கச் சிவந்த’ ‘கன்னங் கரிய’ |