| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 101 |
‘இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்று சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ விடத்தான் வினையினும் குறிப்பினும் மெய்ம்மை யானும் ஈரிரண் டாகும்’ தொ. சொ. 427 என்று ஓதியது அநுவாதம் ஆயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.] 8 | தமிழ்விதிக்கு அகப்படாச் சிலவிதி சாற்றினன் அவைவட மொழிவிதி என்றே அறிக |
மொழிபெயர்த்தற்கு வாராத சிலவற்றை அம்மொழியாகவே அறைந்தனன் என்பது தோன்ற ‘அகப்படா வடமொழி’ என்றாம். அவை சைவன், சைவம், பார்வதி, கார்த்திகேயன், காங்கேயன் முதலியன என்க. [வி-ரை: சைவன் முதலிய சொற்கள் தமிழ்விதியை ஒட்டிமையாது வடமொழிவிதியை ஒட்டி அமைந்த தத்திதாந்தச் சொற்களாம். முதல்சொல் தன்னைச்சேர்ந்த மற்ற சொற்கள் எல்லாம் நீங்கத் தான் அவற்றின் பொருளைக்கொண்டு சிறிது திரிந்து நிற்பது தத்திதாந்தச் சொல்லாம். சிவனை வழிபடுபவன் - சைவன் சிவனோடு தொடர்புடைய சமயம் - சைவம் பர்வத மன்னன் புதல்வி - பார்வதி கிருத்திகை மீன்களின் மகன் - கார்த்திகேயன் கங்கையின் மகன் - காங்கேயன் போல்வன. இத் தத்திதம் பற்றிய செய்திகள் பலவற்றையும் பிரயோகவிவேக தத்தித படலத்தால் அறிக.] 9 | வேற்றுமை வினைஒழிபு எனமூன்று ஆக்கி அவற்றினுள் சொல்லினுள் சிலவிதி அடக்கி ஏனைநால் விதியும் இயம்பிலன் என்க |
அறநூல் முதலிய நான்கற்கும் கருவி எழுத்து முதல் ஐந்தே. அவற்றுள்ளும் ஏனை நான்கற்கும் கருவி சொல்லே. அச் சொல்லிற்குக் கருவி அதுவே. ஆகையால் எல்லாவற்றினும்
|