பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 30163

[மதியிடத்து மறுவும், கையிடத்து விரலும், குன்றிடத்துக் குவடும், நெற்றியிடத்து விழியும், ஆண்டிடத்து இருதுவும், நாளிடத்து வைகறையும் பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டுள்ளமை காண்க.]

ஊர்க்கண் இருந்தான்;

தேர்க்கண் இருந்தான்;

-எனக் கூட்ட இடமும்,

[ஊரின்கண்ணும் தேரின்கண்ணும் இருப்பவன் ஊரைவிட்டும் தேரைவிட்டும் பிரிந்து நீங்குதல் கூடுமாதலின், அவன் ஊரோடும் தேரோடும் பிரிக்கக்கூடிய தொடர்பு கொண்டுள்ளமை காண்க.]

மணியின்கண் ஒளி;

உயிரின்கண் உணர்வு;

பாலின்கண் சுவை;

பாலின்கண் நெய்;

தீயின்கண் சூடு;

நீரின்கண் சீதம்;

-என எங்கும் பரத்தலும்,

[மணியிடத்து ஒளி, உயிரிடத்து உணர்வு, பாலிடத்துச் சுவை, நெய், தீயிடத்துச் சூடு, நீரிடத்துக் குளிர்ச்சி இவை அவ்வப் பொருளுள் யாண்டும் கலந்துள்ளமை காண்க.]

‘உடையான் அரசருள் ஏறு’                                          - கு. 381

‘அவற்றுள், அஇஉஎ ஒக்குறில் ஐந்தே’                                 - ந. 64

-எனக் கூட்டிப் பிரித்தலும்,

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’                                          கு. 50

‘ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்’                                          - கு. 214

-எனப் பிரித்துக் கூட்டலும்,