| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 309 |
இவற்றைப் பிரித்துப் பகுக்காது பகாப்பதமாகவே கொள்க என்பது. (பி. வி. 32 உரை) காண்க. இவை பகுபதமாகக் கொள்ளின் ‘பெயர்தான் அறுவகையாகப் பிரிதலும்’ என்பதனுள் அடங்கும்.] 12 | வினைக்குறிப்பு முற்று வினைகுறிப் புப்பெயர் இருவகை எச்சம் எனப்பெயர் பெற்றும்
|
[வி-ரை: பகுபதம் குறிப்புவினைமுற்று, குறிப்புவினையாலணையும் பெயர், பெயரெச்சம், வினையெச்சம் என்ற பகுப்புக்களையும் பெறும். அவன் நல்லன் - குறிப்பு வினைமுற்று. நல்ல வந்தன - குறிப்பு வினையாலணையும் பெயர். வந்த சாத்தன் - பெயரெச்சம். வந்து போனான் - வினையெச்சம். நல்லன், நல்ல, வந்த, வந்து என்பன பகுபதமாதல் உணரப்படும்.] 13 | பகாப்பதப் பொருள்படப் பகுபதம் ஆகியும் |
‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ - கு. 221 ‘மாதர் மனைமாட்சி யான்’ - நாலடி. 382 ‘வண்ண வண்டின் குரல் பண்ணைபோன்றனவே’ பரி. 14-4 ‘நுனிக் கொம்பர்’ - கு. 476 ‘நத்தம் போல் கேடும்’ - கு. 235 ‘சோதி வாயவும் கண்ணவும் சிவந்தன’ ‘வானம் துளங்கில் என்’ - தேவா. ‘இருவயின் பெயரொடும்’ - ந. 89 ‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்’ - தொ. சொ. 156.
|