பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்105

 

மருவு....வீழ்ந்தது: மருவு - அவர் வந்து சேர்ந்த. மருவு - பெரும் என்றதனால் அவரால் ஆக்கம் படைத்திருந்த என்பது குறிப்பு. 1346 பார்க்க. வீழ்ந்தது - தமது பிற்சரிதக் குறிப்புப்பெற அவர்களது வாக்கினின்றுவரும் அவச்சொல். விரைவு பற்றி இறந்தகாலத்தாற் கூறினார்கள். "எங்களை வாதினில் வெல்ல" (திருஞான - புரா - 685) முதலியவை பார்க்க.

80

1346. (வி-ரை.) மலையும் - மாறுபடும் - தம் சமயத்தோடு முரண்பட்டு வாதிக்கும். பல் சமயம் - புத்தசமயம் முதலியன. வென்று - 1305 பார்க்க.

வென்று - நிலையும் பெற்ற - வெற்றி பெற்றதுடன் அந்த வெற்றி மாறாது நிலைக்கவும் பெற்ற.

இனி அழிந்தது - கால வழுவமைதி. உறுதிபற்றி எதிர்காலத்தை இறந்த காலத்தாற் கூறினார், "வீழ்ந்தது" என முன்பாட்டிற் கூறியதுபோல. வெற்றி பெற்றதுடன் நிலையும் பெற்ற நம் சமயம் இனி வீழ்ச்சி பெறுவதுடன் அழிவும் பெறும்; இது உறுதி என்றனர். இதுவும் பிற்சரிதக் குறிப்புப்படவரும் அவச் சொல். அழிவுறுவதனை - 1410 - 1411-ல் உரைப்பார்.

அழுங்குதல் - மனம் வருந்தி அழிதல்.

கொலையும்....புரிவோர் - இலம் - இது அமணர்கள் சொல்வது; அறவுரைகளாகிய, கொலை - பொய்ம்மை - முதலிய செய்தலில்லாமை. இலம் - நாம் அவற்றைச் செய்யோம், அவை எம்மிடத்தில் இல்லை, என்பது சொல்லின் அளவு என்று - என்று வெளியில் சாற்றி. வாய்ப்பறையறைந்து.

கொடுமையே புரிவோர் - கொடுமைகளாகிய கொலைச் செயலையும் பொய்ம்மைச் சொல்லையுமே பரிவோர். "கொல்லாமை மறைந்துறையும்....(1302), "புன்மையே புரி" (1344) என்ற விடங்களில் உரைத்தவை பார்க்க.

ஏகாரம் - தேற்றம். பிரிநிலையுமாம். "புன்மையே புரி" என்றது போல.

தலையும் பீலியும் தாழ வந்து - மயிர் பறித்த தலையும் மயிற்பீலியும் சமணர்க்குரிய சிறப்படையாளங்களாதலின் அவை தாழ என்றார். தாழ - தொக்கு விளங்க என்ற பொருளில் வந்தது. தாழ்வடைய என்ற குறிப்பும் காண்க. தலைதாழ்தல் - அவமான மடைதற்குறி. பீலி தாழ்தல் - பீலியை அடையாளமாகவுடைய சமயம் அழிவுறுதல.

ஒரு சிறை - சிறை - பக்கம். சிறைப்பட்டார் போல என்றும், சிறைப்படுவார் போல என்றும் கொள்ளநின்ற குறிப்பும் காண்க.

இலவென்று - என்பதும் பாடம்.

81

1347.

 இவ்வ கைப்பல வமணர்க டுயருட னீண்டி
"மெய்வ கைத்திற மறிந்திடின் வேந்தனும் வெகுண்டு
 சைவ னாகிநம் விருத்தியுந் தவிர்க்குமற் றினிநாஞ்
 செய்வ தென்?"னென வஞ்சனை தெரிந்துசித் திரிப்பார்.

82

1348.

"தவ்வை சைவத்து நிற்றலிற் றருமசே னருந்தாம்
 பொய்வ குத்ததோர் சூலைதீர்ந் திலதெனப் போயிங்
 கெவ்வ மாகவங் கெய்திநஞ் சமயலங் கனமுந்
 தெய்வ நிந்தையுஞ் செய்தன" ரெனச்சொலத் தெளிந்தார்.

83

1347.(இ-ள்.) வெளிப்படை. இவ்வகையில் பல சமணர்களும் துன்பத்தோடு கூடி "உண்மைத் திறத்தினை வேந்தன் தெரிந்தால் வெகுண்டு, சைவனாகி, நமது