முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்என்னெஞ்சத் தானென்பன் யான்.
6
யானே தவமுடையே; னென்னெஞ்சே நன்னெஞ்சம்;யானே பிறப்பறுப்பா னெண்ணினேன்; - யானேயக்கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்றவம்மானுக் காளாயி னேன்.
7
ஒன்றே நினைந்திருந்தே; னொன்றே துணிந்தொழிந்தேன்;ஒன்றேயென் னுள்ளத்தி னுள்ளடைத்தேன்; - ஒன்றேகாண்கங்கையான் றிங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்அங்கையாற் காளா மது.
11
அறிவானுந் தானே; யறிவிப்பான் றானே;யறிவா யறிகின்றான் றானே; - யறிகின்றமெய்ப்பொருளுந் தானே; விரிசுடர்பா ராகாசம்அப்பொருளுந் தானே யவன்.
20
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்குறித்துத் தொழுதொண்டர் பாதங் - குறித்தொருவர்கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டுள்ளாதார் கூட்ட மொருவு.
40
அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன்;இன்றுந் திருவுருவங் காண்கிலேன்; - என்றுந்தான்எவ்வுருவோ னும்பெருமா னென்பார்கட் கென்னுரைக்கேன்;எவ்வுருவோ நின்னுருவ மேது?
61
காலையே போன்றிலங்கு மேனி; கடும்பகலின்வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின்றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்குவீங்கிருளே போலு மிடறு.
65
கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்அண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர்விண்ணாளுந் திங்களாய்! மிக்குலக மேழினுக்குங்கண்ணாளர! வீதென் கருத்து.
72
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்எண்ணார வெண்ணத்தா லெண்ணியும் - விண்ணோன்எரியாடி யென்றென்று மின்புறுவன் கொல்லோபெரியானைக் காணப் பெறின்.
85
பெரியனும் பிறிதியாதும் வேண்டே நமக்கீதுறினு முறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்திமற்றொருக ணெற்றிமேல் வைத்தான்றன் பேயாயநற்கணத்தி லொன்றாய நாம்.
88
உரையினா லிம்மாலை யந்தாதி வெண்பாக்கரைவினாற் காரைக்காற் பேய்சொற் - பரவுவார்