| பொன்மலைத் திருவிற் பன்னக நெடுநாண் |
| மாயப் பகழித் தாயக் குரிசின் |
| முரணமை யிருகாற் றிரண்மறைப் புரவி |
| யலர்மரை வாழ்க்கை வலவத் தேரும் |
| 5 வழங்குதற் கமையா வண்மையி னிசைக்கும் |
| பெருந்தகு பாடற் றிருந்திசைப் புலவ |
| ரறன்கடைக் ககலாப் பிறங்குதம் முளத்திற் |
| சாலாக் கல்வி மாலார்க் ககலா |
| வரன்மாண் டமைந்த வுரன்மாண் பலகையிற் |
| 10 றண்டா விருப்பி னெண்டோண் முதல்வனோ |
| டானாது பயிலிய வருமறைக் கேள்வி |
| மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென் |
| றாயிரு கடலு மாற்றலிற் கடையா |
| வையந் திரிபெனு மழல்விடம் படாது |
| 15 வெய்யசெம் பொருளெனு மிளிர்தீஞ் சுதைத்திர |
| ளாராக் காதலி னாராது கைப்பவு |
| மூன்றுவிர லழுந்தா துடறசை திணிந்து |
| கான்றதேந் தெரியற் கருங்குழன் மகளிர்க் |
| கணங்குள நிறீஇ யாருயிர் கவர்க்கும் |