| 20 வளங்கவின் கொழிக்கும் விளங்குசீ ரிளமையும் |
| பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று |
| சிந்தை வழிச்செலு மைந்துநிலை பெறீஇய |
| ரளவினைத் திறத்தி னயரா யாக்கையு |
| மளகைக் கோமா னுளமழுக் கறுப்ப |
| 25 நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமு |
| நீடின் றிரியு நிலைமை நாடி |
| யேற்போ ரங்கைக் கொடைக்கட னிறுத்து |
| நோற்போர் நோற்கும் நோன்மைசா லறனெனு |
| முறுதி யாக்க மொய்யெனக் கழலவும் |
| 30 வரைத்திரள் புரள்விற் றிரைத்தெழுந் திரைக்கணம் |
| விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்து |
| மொளிறுவே லழுவத் துருத்தெழுந் தடர்த்துக் |
| குளிறுவார் முரசும் பிளிறுமால் யானையும் |
| வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு |
| 35 பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும் |
| திறைகே "ரிமை முறைநேர் நடாவியும் |
| தத்தந் தொழிலிற் றலைநின்று வளர்க்கும் |
| பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும் |
| மிஞிறுந் தேனும் வெறிகவர் தும்பியும் |
| 40 கஞலிப் பட்குரல் கஞற்றுவ சுழலும் |
| இருடுஞ்சு மலர்ப்பொழின் மருள்சில் லோதிப் |
| பூவார் சோலைப் புறத்தகப் படுத்து |
| மேவரத் தடைஇய விதுக்குறை கடுக்கும் |
| திவளொளி மாண்ட குவவுநுதல் வாணுதல் |
| 45 தீங்கதி ரமிழ்தத் திங்கட் பிளவி |
| னீங்குகார்க் கறையு நிலாத்தவழ் வெண்மையும் |
| விராயுருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கட் |
| செங்குமு தத்துச் சிறுமறி கிடந்தெனச் |
| செவ்வா யகத்த செயிர்தீர் வெண்பல் |
| 50 விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகிற் றுயல்வர |
| வள்ளையி னொழுக்கிய வள்ளெழிற் செஞ்செவி |
| செவ்வாய் கவுட்டுணைச் சேல்விழி நெற்றி |
| யிவ்வா யுறுப்பா னின்சுவை யமிழ்த |
| வுறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும் |