பக்கம் எண் :

1528தணிகைப் புராணம்

 55 வளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டவ்
            வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும்
            பதும மாநிதி யிதுவெனக் கவன்று
            தாவா வுறுவர் மேவா வுள்ளமு
            மோவப் படமென வுஞற்றுறு திருமுகப்
 60 பகுவாய்ப் பொற்குழை மகர மீனான்
            றைதுமீக் கிடத்தலி னைங்கணைக் கிழவோன்
            வெய்துதன் னாணை விளக்கிய வுயர்த்த
            வணங்குதவழ் கொடியி னிணங்குபணை வேய்த்
            காம்பு புடையடுத்த கதிர்மணிக் குன்றின் [தோட்
 65 தோள்புடை யடுத்த சுடர்ப்பூட் கொங்கை
            குவிமுலைத் துணைகொள் சவிமணி மார்பிற்
            றத்தம தேணி கடவாது தணிய
            நள்ளுநின் றுணர்த்துந் தள்ளாக் குறியி
            னணிவயிற் றொழுகிய மணிமயிர் வல்லி
 70 நெடுகுமயி ரொழுக்கு நெடுவழிப் படர்ந்து
            கடுமுலைக் கோட்டுக் களிறுபட வெடுத்த
            படுகுழி யனைய பயம்படு கொப்பூழ்
            நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண
            நடுநின்று தேய்ந்த விடுகுகொடி மருங்குல்
 75 வையக முயிர்த்தோன் மதிபுனைந் தியற்றலிற்
            கைபுனைந் தியற்றுங் கதிர்மணித் திண்டேர்
            கடாதுருக் கொண்டோடுந் தடாதபே ரல்குற்
            கீழ்மே லாகக் கிளர்ந்தெழி னத்தகு
            வாழையொடு பொரூஉம் வார்ந்தசெறி குறங்கின்
 80 வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய
            வீற்றிருந் தருளும் விரைமல ரேய்க்கு
            மலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி
            மயிலியன் மருளு மியன்மட மாதரைச்
            சீலம் விழைவே செயல்குறி யிவற்றான்
 85 நால்வகைப் பேதமு மாலறத் தெரிந்து
            மருந்துமந் திரத்துந் திருந்துவிழை வேற்றித்
            தேயம் பயிற்சி சேட்டை யியல்பே
            யின்பத் துறையே யிருவகைத் தொழிலே
            யிங்கித வகையே யிவைநனி நாடி