பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1529

 90 யிருவகைப் பொழுதொடு மேற்ப மருவிய
           மூன்று காலமு மூன்று வேகமு
           மொப்பக் கலவி யுஞற்றுபே ரின்ப
           வவாவுளம் பொதிந்துகொண் டழற்றுவெம் படர்
           தவாது பிறைபோல் தணிவின்றி வளர [நோய்
 95 வுவாமதி போல வுருவே தபவும்
           கடவுட் பொங்கரும் தடமருப் பாவும்
           சிந்தா மணியு நந்தா நிதிகளும்
           கலன்முத லான வளம்பல கொழிப்ப
           பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்த
 100 தெவ்வுத் தானவ ரவ்வித் தேங்க
           விரிகதிர்ப் பிழம்பு மரிமான் றவிசிற்
           களிகூர் நெஞ்சாற் காவல் வைகு
           மொளிகூர் மகவா னுறுபத மாதி
           யெளிதினுய்த் தளிக்குந் தெளிவினை போலாது
 105 பார்முதிர் புணரிப் பாயற் கடவுள்
           வார்மதுப் பொகுட்டு மரைமலர்ப் புத்தேள்
           என்றிவர் தமக்கு மெய்தற் கரிய
           சரியை கிரியை யோகத் தவநிலைப்
           பெயர்பொச் சாப்பப் பிறக்கணித் துகவு
 110 மூன நாடக முஞற்றிய திருவருள்
           ஞான நாடக நவிலிய மாறலு
           மானா மலப்பகை நோனாது கழலத்
           தானா னந்தத் தனியுயிர் மடங்கக்
           கட்காண் குருமுதற் கடவு ளாகி
 115 உயிரே யவத்தை யுணர்த்துந் தன்மை
           யருளி னியல்பே யாங்கதன் பயனே
           பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்
           றனைவகை யேழு மரிறபத் தெரிப்பத்
           தாழாது கேட்டு வீழாது சிந்தித்
 120 தங்கைக் கொண்ட வமிழ்தெனத் தெளிந்து
           பொங்கு பேரின்பம் புணராது புணரு
           நிட்டை கூட நிலையது நீங்கவும்
           பஃறிறப் பகைஞர் படையொடு நேர்ந்தென
           வெஃறிறங் காட்டாது வீற்றுவீற் றுடற்றும்