பக்கம் எண் :

1530தணிகைப் புராணம்

 125 பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான்
           முந்தையோ ரீட்டு முழுநிதிச் செல்வமும்
           பொய்ம்மை யாளர் புகழெனத் தேய
           நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரிற்
           பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி
 130 யதுவென வெறுவிய தன்றுமற் றிதுவென
           முன்னைநாண் மருந்தை முறைமுறை யிகழாப்
           பின்னைநாண் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப்
           பண்டைநோய் மேலும் பருகுபன் மருந்தான்
           மண்டுநோய் வேறு மரீஇக் கிளர்ந்துருப்ப
 135 வுரைத்தவென் மொழிவழி யொழிகினை யல்லைகொல்
           பெருத்துநோய் தெறுமென மருத்துவ னொழியத்
           தெய்வத் திறத்தாற் றீர்வுகாண் பாமென
           வுள்ளூர் வயின்வயின் றெள்ளிதி னோங்கும்
           புரிமுறுக் கவிழ்க்கும் பூம்புனற் றீர்த்தமும்
 140 பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும்
           படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை
           யணியயற் புறநகர் மணிகெழு கோட்டமும்
           விரத நியதிப் பரவு கடனாதிப்
           பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந் தேத்தியுங்
 145 கவலை நெஞ்சங் கையறு பினையச்
           சேட்சென் றொராஅல் செய்தென வலித்து
           மிக்கநோய்க் கிரங்கு மொக்கல் புறந்தழுவ
           வறுமைக் கவற்சியு மிறுகுறப் பிணிப்ப
           வில்லுந் தமரு மிசைபயி னாடு
 150 மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையா
           லிருள் கக்குலாசீ மெழுபரித் தேரோன்
           கடுஞ்சினந் திருகிய கொடுமைகூ ரமயத்து
           முளிமுதன் முருக்கிய முழங்கழல் போழ்ந்து
           வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம்