சிரயித்தவர்களுட் பிரதானரும், இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும் திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும். இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார். இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க. அடியில்வருகிற புலவர்புராணச்செய்யுள்கள் இங்குநோக்கத்தக்கவை:- (1) | " தென்கலைவயிணவன் செகமெலாம்புக | | ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம் | | நன்கணத்தினர்களிலொருவன் நாரணன் | | பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான். |
(2) | மருவழகியமணவாளதாசனென் | | றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற் | | பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற் | | பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான். | (3) | செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா | | தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற் | | றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந் | | திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான். | (4) | தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து | | ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான் | | ஏனையபாடலொன்றேனுமோதிலான் | | பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். " | இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர்புராணமுடையார் கூறும் சமாதானத்தை அடியில்வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:- (15) | "சிவனைநிந்தனைசெய்தவனேயென | | இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார் | | அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று | | உவந்துபாடியபாக்களுமுள்ளவே. | (16) | என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே | | நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம் | | அன்றென்றோதவொண்ணாததனாலவன் | | குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே. | |