பக்கம் எண் :

902சீரங்கநாயகியாரூசல்

3.கடிமலருமதுகரமுங்குழலிலாடக்
        கத்தூரியுடன்வேர்வுமுகத்திலாட
நெடுவிழியுமணித்தோடுஞ்*செவியிலாட
        நேர்வளையுஞ்சூடகமுங்கரத்திலாட
வடமணியுங்கண்டிகையுந்தனத்திலாட
        மாகலையுமேகலையுமருங்கிலாடத்
திடமறையும்பரிபுரமும்பதத்திலாடச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
4.கலைமடந்தைவணங்கியொருவடந்தொட்டாட்டக்
        கற்புடையவள்ளியொருவடந்தொட்டாட்ட
மலைமடந்தைபரிவிலொருவடந்தொட்டாட்ட
        வானவர்கோன்மடந்தையொருவடந்தொட்டாட்ட
வலர்மடந்தைநிலமடந்தையுலகம்வாழ
        வருண்மடந்தைபொருண்மடந்தையழகார்நெற்றிச்
சிலைமடந்தைதிருமடந்தையாடிரூசல்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
5.காரனையதிருவரங்கமணவாளர்க்குக்
        கண்களிப்பமனமுருகவறிவுசோர
மூரலெழப்புளகமுறப்புயம்பூரிப்ப
        முகமலரமெய்குழையமோகமேற
வாரமுதேபசுங்கிளியேமுத்தேபொன்னே
        யன்னமேயென்னம்மேயழகின்பேறே
சீரியசிற்றிடையணங்கேயாடிரூசல்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
6.வீறுபொய்கைபூதத்தாரிருபான்ஞான
        விளக்கேந்தமயிலையர்கோன்வியந்துகாண
மாறன்மறைத்தமிழ்மதுரகவிநின்றேத்த
        வாழ்குலசேகரன்பாணன்கலியன்போற்ற
வாறுசமயத்திருந்தோனருகில்வாழ்த்த
        வணிபுதுவைவேதியன்பல்லாண்டுபாடத்
தேறுதொண்டரடிப்பொடிதாரடியிற்சூட்டச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.


* "குழையிலாட' என்பது, பாடாந்தரம்.