(10) சூலமங்கலம்; இருந்தீவனகேசர் 1396; ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன் 12 ஆ. தானவினோதநல்லூர் திருநாவுடையான் என்பவன் கரியுதிர்த்த நாயனார் ஆலயத்தில் திருநாவுடைய பிள்ளையார் உருவைத் தாபித்தது. (294/11) அப்பர் சுவாமிகளுடைய உருவச்சிலை நாட்டின் அரசர்களின் விவாவமும், காலமும். | ராஜராசர் I | 985 - 1013 | 1 | ராஜேந்திரர் | 1013 - 1045 | 1 | ராஜராஜர் II | 1146 - 1178 | 1 | குலோத்துங்கர் III | 1178 - 1216 | 2 | ராஜேந்திரன் III | 1245 - 1267 | 1 | ஜடாவீரபாண்டியன் | 1253 - | 1 | மாற - வீரபாண்டியன் | 1262 - | 1 | விக்கிரமபாண்டியன் | 1283 - | 1 | ஜடாபராக்கிரமன் | 1184 - | 1 | ஆக சோழர் 5 | பாண்டியன் 4 | அப்பருக்குப் பிறகு (600) இராசராசர் வரை ஆறு நூற்றாண்டுகள் கல்வெட்டு,க்கள் இல்லை. பிறகு, 1300 பிறகு, 6 நூற்றாண்டுகள் இல்லை. அதாவது விஜய நகரத்தின் நாயக்கர்கள் முகமதியர்கள் இவர்கள் காலத்தில் தாபிதம் இல்லை. III நாயனாரது திருமடங்கள் (1) திருச்சி - திருப்பராய்த்துறை ஆதிமூலேசுவரர். முன்மண்டபச் சுவர் கி. பி. 1007-இராசராசசோழர் l-22 ஆண்டு. ஆலயத்திற்கருகில் அமைக்கப் பெற்ற திருநாவுக்கரசுதேவன் மடத்தில் மாகேசுரர்களுக்கு அன்னமிட நிலதானம். (644 திருச்சி) (2) தஞ்சை - திருவீழிமிழலை. வீழிநாத சுவாமி முதல்பிரகாரம் - வடசுவர் கி.பி. 1017 இராசேந்திர சோழன் 2ம ஆண்டு - திருநாவுக்கரசு மடத்துக்குச் சொந்தமான நில அட்டவணை (தஞ்சை 843) (3) தென் ஆற்காடு - திருவதிகை வீரட்டானம். முதல் பிரகாரம் தென்சுவர் கி. பி. 1114 குலோத்துங்கன் I - 6ம் ஆண்டு - வாகீசர் மடத்துக்குத்தானம் (தெ. ஆ. 311) (4) செங்கற்பட்டு - 1 வேளச்சேரி...கர்ப்பக்கிரகம் வடசுவர். 1200 கி. பி. குலோத்துங்கன் III - திருவான்மியூர்த் திருநாவுக்கரசு மடத்திற்குச் சேதிநாயனார் பூதானம். (செங் 1131) (5) தஞ்சை - குறுக்கை வீரட்டானர் முன் மண்டபத்துத் தென்சுவர் கி. பி. 1207. குலோத்துங்கன் III 29 ஆண்டு - திருநாவுக்கரசு திருக்குகை கட்டுவதற்கும் அக்குகை மூலமும்...உணவளிக்க வைகாசித் திருநாளுக்குவரும் மாகேசுரர்களுக்கு உணவளிக்கவும் ஆகாயத்தில் திருத்தாண்டகம் ஓதுதற்கும் நெல் தானம் (தஞ் - 219/17). (6) மதுரை - பூதக்குடி : அப்பர் சத்திரத்தில் ஒரு தாமிரசாசனம். இங்கு ஒரு மடம் இருந்தது குறிக்கும் (மது - 1413).1 பெரிய புராணத்தில் கண்ட மடங்கள் இருந்த திங்களூர் அப்பர் மடம், திருப்பூந்துருத்தி, புகலூர், திருநெல்லூர் மடங்கள் : இவை என்ன ஆயின? 1. | 4ல் சொன்ன வேளச்சேரிக்கு ஜீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்றது பழைய பெயர். ஆகவே அங்கே முன்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும். | |