பக்கம் எண் :

இயல் ஒன்று  
  
 இரட்டைச் செய்யுட்கள்

[இந்த இயலில் ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றிருத்தலால், 'இதற்கு இரட்டைச் செய்யுட்கள்' என்று பெயர்.]
   
1.

மனிதரை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல்புரிந்தாலும்,வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

(1)
   
2.

மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும் செயல்புரிந்தாலும், நிழல்தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

(2)
   
3.

'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான்,என்னை வென்றான். என்னைக் கொள்ளையிட்டான்'-இத்தகைய எண்ணங்களை உடையாரிடம் துவேஷம் நீங்காது நிலைத்திருக்கும்.

(3)
   
4.

'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான்,என்னை வென்றான், என்னைக் கொள்ளையிட்டான்'-இத்தகைய எண்ணங்கள் இல்லாதாரிடம் துவேஷம் நில்லாது நீங்கும்.

(4)