இயல் ஒன்று | | | | | இரட்டைச் செய்யுட்கள் |
[இந்த இயலில் ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றிருத்தலால், 'இதற்கு இரட்டைச் செய்யுட்கள்' என்று பெயர்.] | | | | 1. | மனிதரை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல்புரிந்தாலும்,வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல், துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். | (1) | | | | 2. | மனிதனை மனோதர்மமே உருவாக்குகின்றது; சிந்தனைகளே அதன் அடிப்படை; சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும் செயல்புரிந்தாலும், நிழல்தொடர்ந்து செல்வதுபோல், இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். | (2) | | | | 3. | 'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான்,என்னை வென்றான். என்னைக் கொள்ளையிட்டான்'-இத்தகைய எண்ணங்களை உடையாரிடம் துவேஷம் நீங்காது நிலைத்திருக்கும். | (3) | | | | 4. | 'என்னை நிந்தித்தான், என்னை அடித்தான்,என்னை வென்றான், என்னைக் கொள்ளையிட்டான்'-இத்தகைய எண்ணங்கள் இல்லாதாரிடம் துவேஷம் நில்லாது நீங்கும். | (4) |
|
|
|