பக்கம் எண் :

18 தம்மபதம்

26.

அறிவில்லாத மூடர்கள் மடிமையுள் வீழ்கின்றனர்; அறிஞன் கருத்துடைமையைத் தனது முதன்மையான அருந்தனமாகப் பாதுகாக்கிறான்.

(6)
 
  
27.

மடிமையுள் விழவேண்டாம். காமத்தோடு புலன்களின் இன்பங்களில் புகவேண்டாம். கருத்தோடு தியானம் செய்பவன் எல்லையற்ற இன்பத்தை அடைவான்.

(7)
 
  
28.

அறிவாளி, விடாமுயற்சியால் மடிமையை விரட்டிவிட்டு, ஞானமாகிய கோபுரத்தில் ஏறிச் சோகமற்ற நிலையில் இருந்து கொண்டு, கீழே சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களைக் காண்கிறான். மலைமேலிருந்து கீழே சமவெளியைப் பார்ப்பதுபோல், அவன் மற்றையோரைப் பார்க்கிறான்.

(8)
 
  
29.

அறிவாளி, மடிமையில் ஆழ்ந்தவர் நடுவே முயற்சியுடையோனாகவும், உறங்குவோர் நடுவே விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப் பிந்தவிட்டு விட்டு முன்னேறிப் பாய்வது போல், அவன் மற்ற யாவர்க்கும் முன்னால் செல்கிறான்.

(9)
 
  
30.

மகவான்1 கருத்துடைமையால் தேவர்களின் அதிபதியாகி உயர்ந்தான். மக்கள் கருத்தில்லாமையைப் போற்றிப் புகழ்கின்றனர்; கருத்தில்லாமை எப்பொழுதும் இகழப்படுகிறது.

(10)
 
  
31.

மடிமையைக் கண்டு அஞ்சி, கருத்துடைமையில் களிப்படையும் பிக்கு2, உள்ளத்தைப் பிணிக்கும் சிறிய, பெரிய தளைகளை யெல்லாம் அனலைப் போல் எரித்துக்கொண்டு செல்கிறான்.

(11)
 
  
32.

மடிமையைக் கண்டு அஞ்சிக் கருத்துடைமையில் களிப்படையும் கண்டு, அஞ்சிக் கருத்துடைமையில் நிருவாண மோட்சத்தின் அருகில் இருப்பவன்.

(12)

1மகவான்-இந்திரன்.
2பிக்கு-பிக்ஷு-பௌத்தத் துறவி.