33. | காப்பதற்கும், அடக்குதற்கும் அரிதான சபல சித்தத்தை அறிவாளி, வேடன் தன் அம்பை நிமிர்த்துவது போல, நோக்குகிறான். | (1) | | | | 34. | தண்ணீரிலிருந்து வெளியே தரையில் எடுத்தெறியப்பட்ட மீன் துடிப்பதுபோல், (ஆசை காட்டும் தீய) மாரனின் பிடியிலிருந்து தப்புவதற்காக நமது சித்தம் துடிக்கின்றது. | (2) | | | | 35. | அடக்குவதற்கு அரிதாயும், துடிப்புள்ளதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அடக்குதல் நல்லது; அடக்கியாளப்பெற்ற சித்தம் சுக மளிக்கும். | (3) | | | | 36. | அறிவதற்கு அரிதாயும், மிக நுணுக்கமானதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அறிஞன் காத்துவர வேண்டும்; காக்கப் பெற்ற சித்தம் சுகமளிக்கும். | (4) | | | | 37. | நெடுந்தூரம் தனியே சஞ்சரிப்பதாயும், உருவமற்ற தாயும் இதயக்குகையுள் அமர்ந்துள்ள சித்தத்தை அடக்கியாள்பவர் மாரன் பிடியிலிருந்து விடுபட்டவராவர். | (5) | | | | 38. | நிலையில்லாத சித்தத்தையுடையவரும், உண்மையான தருமத்தை அறியாதவரும், மனத்தின் சாந்தி குழம்பியவரும் பூரண ஞானத்தைப் பெற முடியாது. | (6) |
|
|
|