48. | மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக் கொண்டிருக் கும்போது, அவன் தன் இன்பங்களில் திருப்தியடையுமுன், மனம் கலக்க முற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்றுவிடுகிறது. | (5) | | | | 49. | மலரிலிருந்து தேன் சேர்க்கும் தேனீ, மலருக்குச் சேதமில்லாமல், அதன் வண்ணமும் மணமும் சிதை யாமல், தேனை மட்டும் கொண்டு செல்வது போலவே, முனிவன் கிராமத்தில் நடமாடவேண்டும். | (6) | | | | 50. | முனிவன் தன் குறைகளையும், தான் செய்யத் தவறியவைகளையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; பிறருடைய குறைகளையும், பாவச்செயல்களையும்அவன் கவனிக்க வேண்டாம். | (7) | | | | 51. | செய்கையில் காட்டாமல் ஒருவன் வாயால் மட்டும் மதுரமாகப் பேசுதல், அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனையற்றிருப்பதுபோல், பயனற்றதாகும். | (8) | | | | 52. | சொல்லிய வண்ணம் செயல்புரியும் ஒருவனுடைய மதுரமான பேச்சு, அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனையும் பெற்றிருப்பது போல், பயனளிப்பதாகும். | (9) | | | | 53. | புஷ்பக் குவியலிலிருந்து பலவித மாலைகள் தொடுக் கப்படுவது போல், அநித்தியமான மனிதனும் இந்தப் பிறவியில் பலவித நற்கருமங்களைச் செய்யமுடியும். | (10) |
|
|
|