பக்கம் எண் :

ஆயிரம் 33

105.

வனத்தில் நூறு வருட வேள்வித் தீயைவணங்கி வந்தவன், தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருடப் பூசனையை விட மேலானது.

(6)
 
  
106.

புண்ணியம் பெறுவதற்காக ஒருவன் ஒரு வருடத்தில் எத்தனை வேள்விகள் செய்தாலும், அவை அனைத்தும் உத்தம ஞானி ஒருவரை வணங்குவதில் நாலில் ஓரு பகுதிக்கு ஈடாகாது.

(7)
 
  
107.

வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருவோனுக்கு ஆயுள், அழகு. இன்பம், வலிமை ஆகிய நான்கு பயன்களும், அதிகரிக்கும்.

(8)
 
  
108.

தீயொழுக்கத்துடன் அடக்கமில்லாமல் ஒருவன் நூறுவருடம் வாழ்வதைக்காட்டிலும், நல்லொழுக்கத்துடன் தியானம் செய்து வரும் ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது.

(9)
 
  
109.

அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு தியானம் புரிந்துவரும் ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது.

(10)
 
  
110.

ஒருவன் சோம்பலுடன் பலவீனமாக நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், வீரியத்தோடு ஒருவன் முயற்சி செய்து ஒரு நாள் வாழ்வதே மேலானது.

(11)
 
  
111.

(பிறப்பு, இறப்பாகிய) ஆரம்பத்தையும், முடிவையும் அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், அவற்றை அறிந்த ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது.

(12)