[இந்த இயலிலுள்ள சூத்திரங்களில் 'ஆயிரம்' என்ற சொல் பலமுறை வருவதால் இயலின் பெயரே 'ஆயிரம்' என்றாயிற்று] |
| | |
100. | அர்த்தமற்ற பதங்களைத் தொகுத்த நூறு பாடல்கள் ஒப்பிப்பதைப் பார்க்கினும், பொருளுள்ள ஒரேபாசுரம் மேலானது; அதைக் கேட்டதும் ஒருவன் உபசாந்தி1 அடைகிறான். | (1) |
| | |
101. | ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படைகளை வெற்றி கொள்கிறான்; மற்றொருவன் தன்னைத்தானே அடக்கி வெல்கிறான்; இவர்களுள் தன்னை வென்றவனே வெற்றி வீரருள் முதன்மையானவன். | (2) |
| | |
102. | மற்றவர்களை வெல்வதைப் பார்க்கினும், ஒருவன் தன்னைப் பண்படுத்திக் கொண்டு, எப்போதும் புலனடக்கத்தைப் பயிற்சி செய்து, தன்னைத்தானே வெல்வது மேலானது. | (3) |
| | |
103. | அத்தகைய ஒருவனுடைய வெற்றியைத் தேவரோ, கந்தர்வரோ, பிரம்மாவின் துணைபெற்ற மாரனோ தோல்வியாக்க முடியாது. | (4) |
| | |
104. | மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத் தாமே அடக்கிக்கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியை விட மேலானது. | (5) |