94. | தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப் பது போலே, இந்திரியங்களை அடக்கி, அகங் காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லா திருப்பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுவார்கள். | (5) | | | | 95. | பூமியைப் போன்ற பொறுமையுடனும், வீட்டு நிலைபோன்ற உறுதியுடனும், சேறில்லாமல் தெளிந்தநீர் நிலை போன்ற தூய்மையுடையவனுக்குப் பிறப்பு மில்லை; இறப்புமில்லை. | (6) | | | | 96. | உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும்; சொல் சாந்தி யாயிருக்கும்; செயலும்சாந்தியாயிருக்கும். | (7) | | | | 97. | இன்ப துன்பங்களில் அலட்சிய முடையவனாயும்செயல்கள் ஒடுங்கிய பிறவா நிலையாகிய நிருவாண நிலையை அறிந்தவனாயும், பந்தங்கள் அனைத்தை யும் அறுத்துக்கொண்டவனாயும்; (நன்மை தீமை களுக்குரிய) எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் முடிவுகட்டியவனாயும், ஆசைகள் யாவையும் அகற்றிய வனாயுமுள்ள ஒருவனே உத்தம புருஷன். | (8) | | | | 98. | அருகத்துக்கள் (முனிவர்கள்) எங்கே வசிக்கிறார் களோ, அது நாடாயினும், காடாயினும், பள்ளமாயினும், மேட்டு நிலமாயினும், அதுவே இரமணீயமான இடம். | (9) | | | | 99. | ஆரண்யங்கள் இரமணீயமானவை; ஜனங்கள்எங்கே இன்புறுவதில்லையோ அங்கே விரக்தியடைந்தவர்கள் இன்புறுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் காமியங்களை நாடுவதில்லை. | (10) |
|
|
|