பக்கம் எண் :

முனிவர் 31

94.

தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப் பது போலே, இந்திரியங்களை அடக்கி, அகங் காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லா திருப்பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுவார்கள்.

(5)
 
  
95.

பூமியைப் போன்ற பொறுமையுடனும், வீட்டு நிலைபோன்ற உறுதியுடனும், சேறில்லாமல் தெளிந்தநீர் நிலை போன்ற தூய்மையுடையவனுக்குப் பிறப்பு மில்லை; இறப்புமில்லை.

(6)
 
  
96.

உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும்; சொல் சாந்தி யாயிருக்கும்; செயலும்சாந்தியாயிருக்கும்.

(7)
 
  
97.

இன்ப துன்பங்களில் அலட்சிய முடையவனாயும்செயல்கள் ஒடுங்கிய பிறவா நிலையாகிய நிருவாண நிலையை அறிந்தவனாயும், பந்தங்கள் அனைத்தை யும் அறுத்துக்கொண்டவனாயும்; (நன்மை தீமை களுக்குரிய) எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் முடிவுகட்டியவனாயும், ஆசைகள் யாவையும் அகற்றிய வனாயுமுள்ள ஒருவனே உத்தம புருஷன்.

(8)
 
  
98.

அருகத்துக்கள் (முனிவர்கள்) எங்கே வசிக்கிறார் களோ, அது நாடாயினும், காடாயினும், பள்ளமாயினும், மேட்டு நிலமாயினும், அதுவே இரமணீயமான இடம்.

(9)
 
  
99.

ஆரண்யங்கள் இரமணீயமானவை; ஜனங்கள்எங்கே இன்புறுவதில்லையோ அங்கே விரக்தியடைந்தவர்கள் இன்புறுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் காமியங்களை நாடுவதில்லை.

(10)