பக்கம் எண் :

இயல் ஏழு  
  
 முனிவர்

90.

(ஸம்ஸார) யாத்திரையை முடித்துக் கொண்டவ னுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்கள் அனைத்தையும் அறுத்து விடுதலை பெற்றவனுக்கு, எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்குத்துன்பம் என்பதில்லை.

(1)
 
  
91.

கருத்துடையவர்கள் இடைவிடாத முயற்சியுடைய வர்கள். அவர்கள் ஒரேயிடத்தில் ஓய்ந்து கிடப்ப தில்லை! நீர் நிலையை விட்டுப் பறந்து செல்லும்அன்னங்களைப்போல், அவர்கள் இல்வாழ்வை விட்டுப் போகின்றனர்.

(2)
 
  
92.

வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக்காண முடியாது; அதுபோல் சேமித்து வைத்த செல்வங்கள் இல்லாமல், அறிவுக்குப் பொருத்தமானஆகாரம் அருந்தி, பந்தங்களற்ற பரிபூர்ண விடு தலையான நிருவாணம் ஒன்றையே இலட்சிமாய்க்கொண்டவர்களுடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும்.

(3)
 
  
93.

வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல், ஆஸவங்களை1அவித்துப் பந்தங்களற்ற பரிபூரண விடுதலையான நிருவாணத்திலேயே நாட்டமுள்ளவருடைய வழி யைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும்.

(4)

 


1ஆஸவங்கள் நான்கு; காமாஸவம், பாவாஸவம்,திட்டாஸவம், அவிஜ்ஜாஸவம். காமாஸவம்-சிற்றின்பத்தேட்டம்; பாவாஸவம்-பிறப்புக்குக் காரணமான உயிராசை; திட்டாஸவம்-கற்பனையான பொய்க் காட்சி; அவிஜ்ஜாஸவம்-அறியாமை.