90. | (ஸம்ஸார) யாத்திரையை முடித்துக் கொண்டவ னுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்கள் அனைத்தையும் அறுத்து விடுதலை பெற்றவனுக்கு, எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்குத்துன்பம் என்பதில்லை. | (1) | | | | 91. | கருத்துடையவர்கள் இடைவிடாத முயற்சியுடைய வர்கள். அவர்கள் ஒரேயிடத்தில் ஓய்ந்து கிடப்ப தில்லை! நீர் நிலையை விட்டுப் பறந்து செல்லும்அன்னங்களைப்போல், அவர்கள் இல்வாழ்வை விட்டுப் போகின்றனர். | (2) | | | | 92. | வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக்காண முடியாது; அதுபோல் சேமித்து வைத்த செல்வங்கள் இல்லாமல், அறிவுக்குப் பொருத்தமானஆகாரம் அருந்தி, பந்தங்களற்ற பரிபூர்ண விடு தலையான நிருவாணம் ஒன்றையே இலட்சிமாய்க்கொண்டவர்களுடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். | (3) | | | | 93. | வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல், ஆஸவங்களை1அவித்துப் பந்தங்களற்ற பரிபூரண விடுதலையான நிருவாணத்திலேயே நாட்டமுள்ளவருடைய வழி யைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். | (4) |
1 | ஆஸவங்கள் நான்கு; காமாஸவம், பாவாஸவம்,திட்டாஸவம், அவிஜ்ஜாஸவம். காமாஸவம்-சிற்றின்பத்தேட்டம்; பாவாஸவம்-பிறப்புக்குக் காரணமான உயிராசை; திட்டாஸவம்-கற்பனையான பொய்க் காட்சி; அவிஜ்ஜாஸவம்-அறியாமை. |
|
|
|