237. | தட்டார் வெள்ளியின் அசுத்தங்களைப் போக்குதல் போல, மேதாவியானவன் தன் மாசுகளைக் கொஞ்சங் கொஞ்சமாக, முறையாக, அவ்வப்போது நீக்கி வரட்டும். | (5) |
| | |
238. | இரும்பிலிருந்து துரு தோன்றினும், அதை அது அரித்து விடுகிறது; அதுபோலவே (அற நெறி)பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன. | (6) |
| | |
239. | மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை;வீட்டின் குறை பழுது பாராமை;அழகின் குறை சிரத்தையின்மை;காவலாளியின் குறை கவனக்குறைவு. | (7) |
| | |
240. | பெண்ணுக்கு இழுக்கு தீயநடை; கொடையாளிக்கு இழுக்கு கருமித்தனம்; தீச்செயல் யாவும் இம்மை யிலும், மறுமையிலும் இழுக்குடையவை. | (8) |
| | |
241. | மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் உண்டு- அறியாமையே முதன்மையான மலம். பிக்குக்களே! அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்! | (9) |
| | |
242. | வெட்கமின்றிக் காகம் போல் துணிவுடையவனுக்கும், வம்பு வளர்ப்பவனுக்கும். புறங்கூறுவோனுக்கும், முரடனுக்கும், தூர்த்தனுக்கும் வாழ்க்கை எளிதாகவேயிருக்கிறது. | (10) |
| | |
243. | ஆனால், நாணமுள்ளவனுக்கும், நன்னெறியில் நாட்டமுள்ளவனுக்கும், சுயநல மற்றவனுக்கும்,அகங்கார மற்றவனுக்கும், தூயோனுக்கும் வாழ்க்கை கஷ்டமாகவேயிருக்கிறது. | (11) |