309. | தர்ப்பைப் புல்லைத் தவறாக இழுத்தால் அது கையை அறுத்து விடுகிறது; அதுபோல் தீய வழியில் பயிலும் துறவறமும் ஒருவனை நரகில் சேர்க்கிறது. | (6) |
| | |
310. | சிரத்தையின்றிச் செய்யும் காரியமும், ஒழுங்காகக் கடைப்பிடியாத விரதமும், மனமாரப் பேணாத பிரம்மசரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா. | (7) |
| | |
311. | ஒருவன் யாதேனும் ஒன்றைச் செய்ய வேண்டுமாயின் அதை ஊக்கத்தோடும், உறுதியோடும் செய்வானாக; கவனக்குறைவான துறவி தானே தன் மீது அதிகப் புழுதியையே பூசிக்கொள்கிறான். | (8) |
| | |
312. | தீய வினையைச் செய்யாது விடுதலே நலம்.ஏனெனில் தீவினை பின்னால் துன்பத்தை அளிக்கின்றது. நல்வினை புரிவதே நலமாகும்; அதனால் பின்னால் வருந்த நேராது. | (9) |
| | |
313. | (இராஜ்யத்தின்) எல்லைப் புறத்தில் இருக்கும் நகரத்தை உள்ளும், வெளியும் அரண் செய்து காப்பதுபோல், ஒருவன் தன்னைக் காத்துக் கொள்க. கண நேரத்தையும் வீணாக்க வேண்டாம்; ஒவ்வொரு நிமிஷத்தையும் நல்வழியிலே பயன் படுத்தாமல் நிமிஷங்களை வீணாகக் கழித்தவர்கள் நிரயத்தில் விழும்போது வருந்துவர். | (10) |
| | |
314. | நாண வேண்டாத கருமங்களுக்கு நாணியும், நாண வேண்டியவைகளுக்கு நாணாமலும் இருக்கும் மனிதர் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீயகதியை அடைகின்றனர். | (11) |