பக்கம் எண் :

12கபிலர் அகவல்

 

வழிபடுதெய்வமும்
            ஒன்றேயாதலால்
முன்னோருரைத்த
            மொழிதவறாமல்
எந்நாளாயினும்
            இரப்பவர்க்கிட்டுப்
புலையுங்கொலையுங்
            களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில்
            நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணும்
            அல்லதையுணர்ந்து
பேணியுரைப்பது
பிழையெனப்படாது
            சிறப்புஞ்சீலமுஞ்செய்தவமல்லது
பிறப்புநலந்தருமோ
            பேதையந்தணரே.


                                    கபிலர் அகவல்.
                                                முற்றிற்று.