பக்கம் எண் :

கபிலர் அகவல்11

 

அந்தணர்வளர்க்க
            யானும்வளர்ந்தேன்
                          (ஆதலால்)
மாரிதான்சிலரை
            வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை
            நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க
            மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக்
            காயேனென்னுமோ
நீணான்குசாதிக்
            குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக்
            குணவுகாட்டிலுமோ
திருவும்வறுமையுஞ்
            செய்தவப்பேறுஞ்
சாவதும்வேறிலை
            தரணியோர்க்கே
குலமுமொன்றே
            குடியுமொன்றே
இறப்புமொன்றே
            பிறப்புமொன்றே