அந்தணர்வளர்க்க யானும்வளர்ந்தேன் (ஆதலால்) மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ கதிரோன்சிலரைக் காயேனென்னுமோ நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங் கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ திருவும்வறுமையுஞ் செய்தவப்பேறுஞ் சாவதும்வேறிலை தரணியோர்க்கே குலமுமொன்றே குடியுமொன்றே இறப்புமொன்றே பிறப்புமொன்றே
|