பக்கம் எண் :

10கபிலர் அகவல்

 

காவிரிப்பூம்பட்டினத்திற்
            கள்விலைஞர்சேரியில்
சான்றாரகந்தனில்
            உறுவைவளர்ந்தனள்
நரப்புக்கருவியோர்
            நண்ணிடுஞ்சேரியில்
பாணரகந்தனில்
            ஒளவைவளர்ந்தனள்
குறவர்கோமான்
            கொய்தினைப்புனஞ்சூழ்
வண்மலைச்சாரலில்
            வள்ளிவளர்ந்தனள்
தொண்டைமண்டலத்தில்
            வண்டமிழ்மயிலையில்
நீளாண்மைக்கொளும்
            வேளாண்மரபுயர்
துள்ளுவரிடத்தில்
            வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார்சோலைச்
            சுரும்பார்வஞ்சி
அதிகமானில்லிடை
            அதிகமான்வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்
            டாரூர்தன்னில்