பக்கம் எண் :

  

இங்கே-

நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய கதைகளை-சொல்லோவியங்களைத் தொகுத்தளிக்கிறோம்.

பகுத்தறிவு முரசாக 1930ஆம் ஆண்டில் விளங்கி ‘புதுவை முரசு’ இதழிலும் வேறு பல ஏடுகளிலும் வெளிவந்தவை.

காலத்தால் முற்பட்டவை. கருத்துத் தெளிவில் என்றுமே புதுச்சுவை வழங்குவன.

ஏழைகளின் சிரிப்பு உங்களை எட்டுதற்கு உதவிய பூம்புகார் பிரசுரத்தார்க்கும் இந்நூலைத் தொகுத்தளித்த டாக்டர் ச. சு. இளங்கோ அவர்களுக்கும் உங்கள் சார்பில் நன்றி கூறுகிறோம்.

18. 4. 79

-மன்னர் மன்னன்