பக்கம் எண் :

 

ஸ்ரீ :

பன்னிரு பாட்டியல்.

பாயிரம்.

 
 சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி
கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே.
 
   
 

எழுத்தியல்.

 
1ஏத்திய வோத்திய லெழுத்திய லியம்பிற்
பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு
மிருவகை யுண்டியு மூவகைப் பாலும்
பொருவி றானமுங் கன்னலும் புள்ளு
நயம்பெறு நாளு மியம்புதல் கடனே.
 (1)
 

1. - பிறப்பு.

 
2சிறப்புடை யெழுத்தின் பிறப்பினி துரைப்பின்
முந்நான் குயிரு முதல்வன் படைத்தனன்.
(1)
 

 

 
3நல்லுயிர்ப் பகுதி நான்முகன் படைத்தனன். பொய்கையார்.(2)
 

 

 
4கண்ணுத றிருமால் கதிர்வேன் முருகன்
விண்ணவர் தலைவன் வெங்கதிர் வெண்மதி
1நிதிக்கோன் கூற்றுவ னெடுநீர் வருண
னென்னுங் கடவுள ரிரண்டிரண் டாக
மன்னிய வொற்று 2வகைவேறு படைத்தனர்.
(3)
   
5ஒன்பது தேவரு முடம்பு படைத்தனர். பொய்கையார்.(4)
 

 

 
 

2-வருணம்.

 
6நறுமலர்த் திசைமுக னீச னாரண
னறுமுகன் படைத்தன வந்தணர் சாதி.
(1)

அவை:- அகர முதற் பன்னீருயிரும்,

க, ங, ச, ஞ, ட, ணவும்.

[பிரதிபேதம்.] 1நிதிக்கோ னியமன். 2வகைபடைத்தனரே.