| ஸ்ரீ : பன்னிரு பாட்டியல். பாயிரம். | | | சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சிந்தையில் வைத்து முன்னோர் பொருணெறி கூட்டி யுரைப்பல் பாட்டியன் மரபே. | | | | | | எழுத்தியல். | | 1 | ஏத்திய வோத்திய லெழுத்திய லியம்பிற் பிறப்பும் வருணமுஞ் சிறப்பாங் கதியு மிருவகை யுண்டியு மூவகைப் பாலும் பொருவி றானமுங் கன்னலும் புள்ளு நயம்பெறு நாளு மியம்புதல் கடனே. | (1) | | 1. - பிறப்பு. | | 2 | சிறப்புடை யெழுத்தின் பிறப்பினி துரைப்பின் முந்நான் குயிரு முதல்வன் படைத்தனன். | (1) | | | | 3 | நல்லுயிர்ப் பகுதி நான்முகன் படைத்தனன். பொய்கையார். | (2) | | | | 4 | கண்ணுத றிருமால் கதிர்வேன் முருகன் விண்ணவர் தலைவன் வெங்கதிர் வெண்மதி 1நிதிக்கோன் கூற்றுவ னெடுநீர் வருண னென்னுங் கடவுள ரிரண்டிரண் டாக மன்னிய வொற்று 2வகைவேறு படைத்தனர். | (3) | | | | 5 | ஒன்பது தேவரு முடம்பு படைத்தனர். பொய்கையார். | (4) | | | | | 2-வருணம். | | 6 | நறுமலர்த் திசைமுக னீச னாரண னறுமுகன் படைத்தன வந்தணர் சாதி. | (1) |
அவை:- அகர முதற் பன்னீருயிரும், க, ங, ச, ஞ, ட, ணவும். [பிரதிபேதம்.] 1நிதிக்கோ னியமன். 2வகைபடைத்தனரே. |