| எழுத்தியல் 3 | |
| 3-கதி. | |
19 | வானவர் மக்க ணரகர் விலங்கென வூனமில் கதியே யொருநான் காகும். | (1) |
| | |
20 | கதியெனப் படுபவை காண்டக விரிப்பிற் றேவர் மக்க ணரகர் விலங்கென மேவிய கதிக ளீரிரண் டாகும். இந்திரகாளியார். | (2) |
| | |
21 | தேவர் மக்க ணரகர் விலங்கென மேவிய நான்கே யெழுத்தியல் கதியே. பரணர். | (3) |
| | |
22 | அவற்றுள், உயிர்க்குறில் வல்லின மீற்றெழுத் தொழியப் பயிர்ப்புறு வானவர் கதியெனப் படுமே. | (4) |
| | |
23 | தேவர் கதியே தெரியுங் காலை அஇ உஎ கசட தபவே. பரணர். | (5) |
| | |
24 | மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு மிக்க சிறப்பின் ஙஞண நமவே. | (6) |
| | |
25 | அவைதாம், ஆஈ ஊஏ ஙஞண நமக்கள் மேவிய மக்கட் கதியென விளம்புவர். | (7) |
| | |
26 | ஒழிந்த ஐஔ ஆய்த வெழுத்துங் கழிந்த வளனவு நரகர் கதியே. | (8) |
| | |
27 | ஒ ஓ விரண்டும் யரல ழறவெனத் தொக்கன வைந்தும் விலங்கின் கதியே. | (9) |
| | |
28 | மன்னுவர் தேவர் மக்கள் செய்யுளுண் மன்னா விலங்கொடு நரகர் கதியே. | (10) |
| | |
29 | விலங்கு 1நரகும் விலங்கின வென்ப. இந்திரகாளியார். | (11) |
| | |
30 | 1நரகும் விலங்கும் வரைவ ரீண்டே தேவரு மக்களு மேவின பாட்டே. | (12) |