பக்கம் எண் :

 

எழுத்தியல் 3

 
 

3-கதி.

 
19வானவர் மக்க ணரகர் விலங்கென
வூனமில் கதியே யொருநான் காகும்.
(1)
 

 

 
20கதியெனப் படுபவை காண்டக விரிப்பிற்
றேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய கதிக ளீரிரண் டாகும். இந்திரகாளியார்.
(2)
 

 

 
21தேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய நான்கே யெழுத்தியல் கதியே. பரணர்.
(3)
 

 

 
22அவற்றுள்,
உயிர்க்குறில் வல்லின மீற்றெழுத் தொழியப்
பயிர்ப்புறு வானவர் கதியெனப் படுமே.
(4)
 

 

 
23தேவர் கதியே தெரியுங் காலை
அஇ உஎ கசட தபவே. பரணர்.
(5)
 

 

 
24மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு
மிக்க சிறப்பின் ஙஞண நமவே.
(6)
 

 

 
25அவைதாம்,
ஆஈ ஊஏ ஙஞண நமக்கள்
மேவிய மக்கட் கதியென விளம்புவர்.
(7)
 

 

 
26ஒழிந்த ஐஔ ஆய்த வெழுத்துங்
கழிந்த வளனவு நரகர் கதியே.
(8)
 

 

 
27ஒ ஓ விரண்டும் யரல ழறவெனத்
தொக்கன வைந்தும் விலங்கின் கதியே.
(9)
 

 

 
28மன்னுவர் தேவர் மக்கள் செய்யுளுண்
மன்னா விலங்கொடு நரகர் கதியே.
(10)
 

 

 
29விலங்கு 1நரகும் விலங்கின வென்ப.           இந்திரகாளியார்.(11)
 

 

 
301நரகும் விலங்கும் வரைவ ரீண்டே
தேவரு மக்களு மேவின பாட்டே.
(12)

[பி-ம்.] 1 நரகரும்