| 4.-உண்டி. | | 31 | அமுதென விடமென 1வருமிரு வகையு முணவெனப் புலவ ருரைத்தன ருளரே. | (1) | | | | 32 | நஞ்சென வமுதென நவிலவும் படுமே. பொய்கையார். | (2) | | | | 33 | உணவே யமுதமும் விடமு மாகும். அவிநயனார். | (3) | | | | 34 | உயிர்க்குறி னான்கொடு கசதப நமவ 2மயக்கற வமுத வெழுத்தாகு மென்ப. 3அவை:- அ, இ, உ, எ, க, ச, த, ப, ந, ம, வ. | (4) | | | | 35 | இவ்வுயிர் மெய்யோ டியைந்தன கொளலே. | (5) | | | | 36 | ஆஓ விரண்டும் யரல மூன்றுந் தாவிலிவ் விருவகைக் கூட்டத் தியைந்தவு மளபு மாய்தமு மைவகைக் குறுக்கமு 4முளமலி புலவ ருரைத்தனர் நஞ்சென் றவையொரு பெயர்மருங் கணைய நிற்பி 5னவையுறு துஞ்சலு நடுக்கமுஞ் செய்யும். | (6) | | | | 37 | இருவகைக் கூட்டத் தியைந்தமேற் கூறிய ஆகார வோகாரத் தொடுய ரலக்க ளென்னு மொற்றொடு மியைந்தவுயி ரளபெடை. | (7) | | | | 38 | ஐவகைக் குறுக்கமு மறையுங் காலை இகர உகர ஐகார ஔகார மகர மென்னு மிவற்றின் குறுக்கம். | (8) | | | | 39 | ஆ ஓ யரல முதலிய வளபெடை யாய்தமைங் குறுக்க முளப்பட வெல்லாம் விடமென மொழிப மெய்யுணர்ந் தோரே. பரணர். | (9) |
[பி-ம்.] 1 விருவகை யெழுத்து. 2 மயக்கறு மமுதெழுத்தாகு; எனப்பதினொன்று மமுதென மொழிப. 3 ‘அவைதாம், அஇ உஎ கசதந பமவ, வெனப்பதி னொன்று மமுதென மொழிப’. 4 முளமகிழ். 5 னவையுறு துஞ்சலுங் கெடுதலுஞ்; னவையுறத் துஞ்சலுங் கெடுதலுஞ். |