| | இனவியல் | |
| 219 | ஆதி நிலையே குழாங்கொள லென்றெடுத் தோதிய புலவரு முளரென மொழிப. | (48) |
| | | |
| 220 | ஏழு நிலையு மியம்புங் காலைப் பேதை பெதும்பை மங்கை மடந்தை யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காத னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே.1 | (49) |
| | | |
| 221 | பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. | (50) |
| | | |
| 222 | பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். | (51) |
| | | |
| 223 | மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். | (52) |
| | | |
| 224 | மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத் திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். | (53) |
| | | |
| 225 | அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. | (54) |
| | | |
| 226 | தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. | (55) |
| | | |
| 227 | ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது பேரிளம் 2பெண்டுக் கியல்பென மொழிப. பொய்கையார். | (56) |
| | | |
| 228 | காட்டிய முறையே நாட்டிய வாண்பாற் கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. | (57) |
| | | |
| 229 | பாலன் யாண்டே யேழென மொழிப. | (58) |
| | | |
| 230 | மீளி யாண்டே பத்தியை காறும். | (59) |
| | | |
| 231 | மறவோன் யாண்டே பதினான் காகும். | (60) |
என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. (ச-பி.)