பக்கம் எண் :

 

இனவியல்

 

 

செயல்பெற வைப்பது சின்ன மதுவே
யாதிப் பாவி னதனினம் வருமே.                 பொய்கையார்.
(68)
 

 

 
240மலையே யாறே நாடே யூரே
பறையே பரியே *களிறே தாரே
†பெயரே கொடியே யென்றிவை தசாங்கம்.
(69)
 

 

 
241பத்தே யேழே மூன்றே சின்னம்.1(70)
 

8-பரணி.

 
242மயக்கறு கொச்சகத் தீரடி யியன்று
நயப்புறு தாழிசை யுறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த வுழிஞை முற்றித்
தும்பையிற் 2சென்ற தொடுகழன் 3மன்னனை
4வெம்புசின மாற்றான் றானைவெங் களத்திற்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்
5தொருதனி யேத்தும் பரணியது பண்பே.
(71)
 

 

 
243தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை
மேவி யமருங் காளி கோயில்
 

*களிறொழித்துப் படைகோடலுமுண்டு. அவ்வாறு திருவாசகத்துள்ள திருத்தசாங்கத்துக் காண்க.

பெயரை ஆணை என்பாருமுளர். (இலக்கணவிளக்கப்பாட்டியல்-22)

[பி-ம்.] 1இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,

‘பத்தே யேழே மூன்றொரு சின்னமொழி
யாயிற் பின்னர் வருமொழி தன்னொடு
பிளவா ரிருமொழி யாமெனி னஞ்செழுத்
துடன் ............. .........தாகு
மெ(ன்)ன மொழிப தொன்னெறிப் புலவர்’.

(54)

‘ஒருபெய ரீரடி மொழிவைத்துப் பிளவார்’.

என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச-பி.]

2சினம்பெறு. 3மன்னன்; மன்னவன். 4வெம்பு சினமாற் றானை வெங்களத்துக், குருதிப் பேரியாறு பெருகுங் கொற்றத். 5தொருவற் போற்றும். [ச-பி.]