பக்கம் எண் :

புலவராற்றுப்படை11


                          மதுரைத்
                      தமிழ்ச் சங்கத்துப்
                      புலவராற்றுப்படை

  பரிதிவெயி லெறிக்கும் விரிவுறு வெளிக்கீழ்
விளிங்கனி நின்றாங்கு நின்று துளங்கிய
மருணீர் மணியென வுருணீ ரும்ப
ரடர்ந்துமண லாடையிற் படர்ந்தன் றாகலிற்
5 கருங்கடற் றெனுமிவ் விருங்கண் ஞாலத்துப்
பரத கண்டம் பண்ணிய விரதந்
தனிமையென் பெயர்த்தா யினிமையென் பொருட்டா
யுத்தர மொரீஇத் தக்கணம் போந்தெனக்
கங்கைச் சடைய னொருபாக மங்கையன்
10 சிமயப் பொதியத் தமர்முனி யகத்தியற்
காய்ந்துதர வுணர்த்திப் போக்கப் போந்த
வேர்ந்துணர் மாந்தர்க் களிக்கு மீர்ந்தமிழ்
முழுதுணர் சிறப்பிற் பழுதுதீர் புலவ
வொன்றுநின் னுள்ளங் குன்றுதக விரியக்
15 கேளா யத்தை கிளக்குவல் வாளா
மன்னிய வொருநீ யன்ன யானும்
பொருந்துறு புகழி னருந்தமிழ் நசைஇ
மதனுடை முந்துநூ லதன்வழிப் பட்ட
தொல்காப் பியமுதற் பல்காப் பலவென
20 விலக்கணந் தெரிக்கும் விலக்கினூ றேர்ந்து
பொற்புறு மெழுத்துச் சொற்பொருள் யாப்பு
விழுமிய வகையி னணியிவை பழுநி
யெஞ்சலில் சீர்த்திப் பஞ்சகா வியம்பிற
வெட்டுத் தொகையொடும் பத்துப் பாட்டொடு
25 மின்பமர் கீழ்க்கணக் கொன்பதிற் றிரட்டியெனச்
சங்க மரீஇய பொங்குநூ றேற்றி
மறையில் கேள்வித் துறைபல் போகிப்
பாவினம் யாத்தற்கு வாய்வளங் கூர்ந்தனன்
கற்றுணர் மாக்க ளருமை யிற்றென