பக்கம் எண் :

12 புலவராற்றுப்படை

30 வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
பொன்னு மணியு முன்னாட் சிதறித்
தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
பாரியுங் காரியு மாயு மோரியும்
பேகனு நள்ளியு மதிகனு மாகி
35 வரையாது கொடுத்தோர் வாணா ளீதன்
றரையருந் தமிழ ரல்ல ராகலி
னற்றமிழ் மாட்சியுங் கற்றவர் மாட்சியும்
புரிந்துளங் களிப்பத் தெரிந்தாங் கருண
ரில்லென் கவற்சியிற் புல்லென் முகன்கண்
40 டுடுக்கையு முண்டியு மிருக்கையு முசா அய்க்
கொடுக்குநர் யாரென் றடுக்குமவர் கரப்பக்
குன்றுவரு நெஞ்சின னின்றன னுழந்தே
கற்றவர் கல்லா மற்றவ ரிவரெனத்
தெற்றெனப் படாஅ வகையிற் றாகிக்
45 கண்ணின் மாக்கண் முன்ன ரெண்பட
வியன்மணி நீரையிற் செயன்மணி விராஅய்க்
கிடந்திமைத் தாங்கு மடந்தகழ் பவர்மு
னிருவருந் தகைமையி னொருவரெனக் கலாவி
யறியா ரென்னாப் பெருஞ்சுட் டுறீஇப்
50 போலிப் புலமையர் திரியுமிக் காலத்துப்
புனைநூ லுணரா வனைய ரானு
நறவோர் வாழ்க்கைப் பறவையின் விழைஇ
யருங்கலை பலவு மொருங்குடன் றுரீஇ
நன்மையிற் பயிலுந ரின்மை யானும்
55 பயிலுநர் சிலரே யாகிப் பயில்வுழிப்
புரத்தன் மாலையர் கரத்த லானு
நன்றுறு தமிழ்வளங் குன்றுதக வுணர்ந்து
பண்டையிற் சிறந்தது தழைப்பக் கொண்டு
வானம ரதனை வளர்ப்பல் யானென
60 வஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
பிணியவிழ் பலர்ந்து சுழல்காம் பணிமலர்
வன்னக் கம்பலம் விரித்தாங் கன்ன
தரைபடர்ந் திமைக்கும் விரைகெழு பூம்பொழி
லிருமருங் கொழுகிய பொருகரை வையைச்
65 செந்தமிழ் நாட்டுத் திருத்தகு மூதூர்
பைந்தமிழ் வளர்த்த பாண்டிய ரிருக்கை
நடைமாண் புரவியுந் தொடைமான் றேரும்
பணையிரு கோட்டி னிணையெருது பிணித்த
பாண்டிலுஞ் சிவிகையுஞ் சிறுகண் யானையுங்