41 பூதந் தந்தபர மானந்தத்தை நாலாகப் பொன்னின் கமலத்திலே எடுத்தான்-அதில் சோதி கோசலைக்கொன்று கைகேசிக்கொன்றும் சுமித்திரைக் கிரண்டுமாக் கொடுத்தான்-மூத்த பேதை கோசலை இடந்திந்த ராகவன் பிறந்தான் என்கவலையை விடுத்தான்-இவனை (ஆரெ) 2. தலையாம் பரதன் லட்சுமணன் சத்துருக்கன் தம்பியர் இவனுக்கு நேயம்-மிகக் கொலையாளன் சுவாகுவையும் சேனையையும் இவனம்பு கொண்டுபோனதென்ன மாயம்-நான் உலையா தென்வேள்வியை முடித்தானே இவனம்பால் உருண்டதே தாடகை காயம்-மெத்த மலைபோலே வந்ததும் பனிபோலே போச்சிந்த மகராசன் செய்தச் காயம்-இவனை(ஆரெ) 3. துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே துடைத்தானே அவள் உடல் மாசை-சொல்லும் பெருக்கம் என்ன இவன் பிறக்கவே உலகெங்கும் பிறந்ததே மங்கல ஓசை-உங்கள் பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ பார்க்கவேணும் இன்னோர் ஆசை-இங்கே வரச் சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலிவிலே வந்தானே நீங்கள் செய்த பூசை-இவனை(ஆரெ) ------ ஸ்ரீராமர் வில்வளைத்தல் விருத்தம்-15 புங்கவனாம் முனிவனிந்த வாறு சொல்லப் போர்வில்லை அறுபதினா யிரம் பேராலே அங்குவரும் படிசெய்தான் இதைநாண் ஏற்ற ஆகுமென்றால் மருமகளே ஆகும் என்றான் சிங்கமெனும் சனகனுடன் விண்ணும் மண்ணும் திடுக்கிடவே எல்லோரும் ராமன் கையால் |