பக்கம் எண் :

40

சரணங்கள்

1. பண்ணிப் பதித்தாற் போல் இரு           ஸ்தனமும்-கூட
     பாங்கியர்கள் இன்ன முந்துரைத்        தனமும்
  எண்ணத்தாலும் வண்ணத்தாலும்           பங்கயப்
     பெண்ணைப் போல் கண்ணிற் காணும்   மங்கையர்(ஆரோ

2. பாக்கியம் என்ப திவர்தெரி              சனமே-அதிங்கே
     பலித்ததென்ன புண்ணியமோ          மனமே
  மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும்     பெண்கள்
     பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ கண்கள் (ஆரோ)

3. சந்திர விம்பமுக                       மலராலே-என்னைத்
     தானே பார்க்கிறார்                  ஒருகாலே
  அந்த நாளில் தொந்தம் போலே          உருகிறார்
     இந்த நாளில் வந்து சேவை           தகுகிறார் (ஆரோ)

கௌசிகர் ஸ்ரீராமர் வரலாறு சொல்லுதல்

விருத்தம்-14 

மனதில் இந்தப் படிநினைந்து மறுநாள் எழுந்து மகஞ்செய்யும்
கனக மணிமண் டபத்தினிற்போய் காகுத்தனும் தம்பியு மிருந்தார்
அனைய காலத் திவர்பெருமை அருமை தெரிய உரையு மென்றே
சனகன் உரைப்பக் கௌசிகன்உத் தரிப்பான் விவரம் விரிப்பானே.

தரு-13

சங்கராபரண ராகம்                        ஆதிதாளம்

பல்லவி

     ஆரென் றெண்ணாமலே - நாளுமிவன்
     அதிசயங்களைச் சொல்லக் கேளும்           (ஆரெ)

அநுபல்லவி

     சூராதி சூரன் ராமன் எனும் பேரன்
    சுகுண தீரன் ரவிகுலகு மாரன் - இவனை     (ஆரெ) 

சரணங்கள் 

1. ஆதியில் தசரதன் புத்திர காமெஷ்டி
         யாகம் செய்ய வென்று      தொடுத்தான்-வந்த