பக்கம் எண் :

413

சரணங்கள்

1. வெள்ளமான வானர           வர்க்க-நடுவேதம்பி
     மேருமலைபோல் அருகே    நிற்க-பூணில்லாமார்பம்
  புள்ளிவில் போடாதமேகம்      ஒக்கத்-தோள்வளைநீக்கிப்
     பூட்டில்லா மந்தரம்போல்    சோபிக்க-மூன்றுலோகமும்

 கள்ள அரக்கர்தினம்           கிள்ளிக் கிள்ளி அருந்தக்
 கொள்ளை கொடுத்தமரர்        துள்ளித்துள்ளி வருந்த
 வள்ளலாகி முறை              உள்ளபடி திருந்தப்
 பள்ளி அரவணையைத்          தள்ளி எழுந்திருந்த    (ராம)

2. தருமம் ஆகரூபி         கரித்தானைப்-பிரசண்டகோ
     தண்டமும் அண்டமும் பரித்தானைத்-தாமரைபூத்த
  கருமுகில் போல்அவ     தரித்தானே-மரவுரியைக்
     கச்சை போலவச்சு     வரித்தானைச்-சனகன் கன்னி

  இருவிழியி லுமுள்ள      கருமணி எனவந்த
  திருவுருவினில் ஒளி      பெருகிடத் தாய்முந்த
  விரதம் கொடுத்தமுடி     சிரசினில் கொண்டுசொந்த
  அரசன் கொடுத்தமுடி     பரதனுக் கன்றுதந்த            (ராம)

3. பூமிதனில் அடிக்கடி           வீழ்ந்து-சூரியனைக் கண்ட
     பூமலர்போல் முகப்பிரபை   சூழ்ந்து-ராக்ஷதகுல
  ஆண்மை எல்லாம் வரவரத்    தாழ்ந்து-சாமிகடைக்கண்
     ஆனந்த சமுத்திரந்தன்னில்  ஆழ்ந்து-சுந்தரம் உள்ள

  காமனை உதவிய         மாமனைத் துளசியந்
  தாமனைத் திருமுகச்      சோமனைப் புசபல
  வீமனைச் சானகி         வாமனைத் தேவர்கள்
  ஆமனை வரும்பணி      பூமனைத் தசரத       (ராம)

-----

விபீஷணர் ஸ்ரீராமரைச் சரணடைதல்

விருத்தம்-9

    வசமுடன் இப்படிகண்டு நால்வரான
           மந்திரிகள் வரவிபீஷணனும் வந்தான்
    நிசமுடன் ராமச்சந்திரன் சந்நிதிக்கு
           நேராக வரவரக் கண்ணீராருகி