412 2. மந்தர கிரியாலே-குழம்புங்கடல் வானோர்க்கமுதம் முன்னாலே-சந்தோஷமாகத் தந்ததே ஒருகாலே-என்னசெய்தாலும் சகிப்பார் நல்லோர் இதுபோலே-ஆகையினாலே என்தன் பிறவியும் தீரும்-இலங்கையிலே வந்திடுமே சூரியன் தேரும்-அரக்கருக்கு அந்தம் முத்தியும் சேரும்-நிலவரமா சந்தேகம் இல்லைஇது பாரும் (என்) 3. கண்ணீர் ஆறாய்ப் பெருகுதே-சாமிசொற்கொண்ட காதில் இன்பம் வருகுதே-நெஞ்சும் உடம்பும் வெண்ணெய் போலே உருகுதே-மயிர்க்கூச்சிட்டு மேனிபுளாகம் தருகுதே-தாயை விடென்று எண்ணினான் சொன்ன விசாரம்-எண்ணாமல் அவன் பண்ணிணானே ஒட்டாரம் அதனால் இந்தப் புண்ணியனைக் கண்டேன் இந்நேரம்-இது எனக்கு அண்ணன் செய்த உபகாரம் (என்) ------ விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல் விருத்தம்-8 பத்திவிபீஷணன் இவ்வாறுருகி அடிக்கடி மண்மேற் படிந்துவந்தான் அத்திமுன்னே கூவவந்த ஆதிமூலப்பரனே அமரர்கூவ நித்தியகோதண்ட பதிஎனவந்தான் என்குறையும் நீக்கவந்தான் சத்தியமாம் எனத்தேறி மனங்கொண்டான் ராமதரிசனங் கண்டானே தரு-7 மோகனராகம் ஆதிதாளம் பல்லவி ராமனைக்கண் ணாரக்கண்டானே-விபீஷணன்கை மாமுடிமேல் வைத்துக்கொண்டானே (ராம) அநுபல்லவி காமனும் செங்கமலப் பூமனும் பணிபரந் தாமனை ஆயிர நாமனைக் கோதண்ட (ராம) |