588 தரு-91 சைந்தவி ராகம்                           திரிபுடை தாளம் பல்லவி இனிநான் இருக்கலாமோ-தாயே                  (இனி) அநுபல்லவி அனியாயத்தில் அய்யனுக் காகாமற்போய்          (இனி) சரணங்கள் 1. மறுவில்லா வரங்கொண்டேன்              நானே-அண்ணன்      வழிபார்த்துப் பார்த்தென்தன் விழியும்பூத் தேனே   சிறுபிள்ளைப் பருவம் நான்               தானே-இதிலே      சிறகுபறிகொடுத்த பறவையாய்ப்போ      னேனே    (இனி)      2. வருத்தம் அறியான்சாமி                 கொஞ்சம்-அறிந்தால்      வாராமல் இருப்பானோ எனக்குண்டோ  தஞ்சம்   நெருக்குதே கவலைப்பிர                 பஞ்சம்-என்னை      நெருப்பிலே போட்டாலும் வேமோஎன்  நெஞ்சம்    (இனி)      3. அரசனுக் குதவாமல்                கெடுத்தேன்-அண்ணன்      அருமந்த முடிக்கும்நான் சடைமுடி கொடுத்தேன்   தருமத் துரையைக் காட்டில்          விடுத்தேன் பரதன்      சாமித்துரோகி என்றே எங்கும்பேர் எடுத்தேன்      (இனி)      4. அய்யர் அன்னை சொல்லை நோ         காமல்-கேட்க      அளிக்கத்தக்கவன் திருவுளத்துக்கா காமல் பல   செய்தேன்வெகு குற்றம்போ               காமல்      தீட்டுக்கு முழுக்கொன்றா நெருப்பில்மூழ் காமல்    (இனி) ------ ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல் விருத்தம்-114 தந்தாய் கௌசலை வந்தா ளொடுபர தன்பா டுகளிவை முன்கூறி நொந்தார் அனலை வலஞ்சூழ் பொழுது குழந்தாய் குழியில்                                           அமிழ்ந்தாதே அந்தோ பொறுபொறு மைந்தா பொறுபொறு அன்பாய்                                           உனதுமுகந்தேடி வந்தான் ரகுபதி வந்தான்என அனுமன்தான் இஃதுரை தந்தானே    |