94 3. ஆதிகதை அறிவீர் நீரும்-சகரர் அறுபதினாயிரம் பேரும் தாதைசொற்படிதங்கள் உயிர்கொடுத்தாரே - முனம் தகப்பன்சொற்படிக்குநான் தவஞ்செய்வதோ கடினம் (வன) 4. ஈன்றவன் சொல் வேதம் தானே-பரசுராமன் தாயை வெட்டி னானே ஆண்டுபதி னாலும்போய் வருவான் எனக்கண்டோ அரசன்எனைப் போவென்றால் திருவாக்கெதிர்வாக்குண்டோ (வன) -0-0- ஸ்ரீராமர் வனம் ஏகலைப் பற்றி லெட்சுணர் கோபம் கொளல் விருத்தம்-12 சிந்தையை கௌச லைக்குத் தேற்றிய ராமன் மீண்டு சுந்தரி சுமித்திரா தேவி துணையடி வணங்கும் போதில் இந்தமா மகுடம் சாமிக் கீகிறேன் இப்போ தென்ன அந்தமாம் லட்சும ணன்தான் ஆக்கிரகம் செய்கின் றானே தரு-7 கௌலிபந்து ராகம் ஆதிதாளம் பல்லவி நானே லட்சுமணன்-ஆனால் கொடுக்கிறேன் ராமனுக்கு மகுடம் (நானே) அநுபல்லவி சேனைபேர் என்னோ டெதிர்க்கட்டும் குதிக்கட்டும் சித்திரக் கணையால் வென்று அத்தனைப் பேரையும் கொன்று (நானே) சரணங்கள் 1. குருடன் ராசமுழி முழிக்கிறாப் போலே பட்டம் கொள்ளுமோ பரதற்கு (முடிசூட) |