93 7. பொன்அடி கசங்காதோ-மேனியில்-வன்னமும்சங்காதோ-வெயில்பட்டால் என்என்று குதிப்பாயோ-கல்லும்முள்ளும்-என்என்று மிதிப்பாயோ 8. நீசெலும் வனந்தானே-உன்னுட-னேசெல்லுவேன்நானே-என்னிட ஆசையெல்லாம் மறந்தேன்-இதுக்கோ-கோசலை பெண்பிறந்தேன் ------ ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி விடைகொளல் விருத்தம்-11 தாய்வருந் திடஇவ் வாறு தளருவாள் தன்னை நோக்கிப் பாய்வரும் பதினா லாண்டும் பதினாலு நாளே யம்மா நீவருந் திடுவ தேனோ நின்கிருபை யாலே கானில் போய்வரு வேன்கே ளென்று போற்றுவான் தேற்று வானே தரு-9 புன்னாகவராளி ராகம் ஆதிதாளம் பல்லவி வனம்போய் வருகிறேன் அம்மா - கோசலை அம்மா வனம் போய் வருகிறேன் அம்மா (வனம்) சரணங்கள் 1. வனம்போய் வருகிறேன் நானே - பெற்ற மாதா பிதாவசனம் தானே தனம் தனி மந்திரமும் அது சகல மந்திரமும் அது சத்தியமும் அது-பர முத்தியும் அது தானே (வனம்) 2. கானம் நான் போக வேணும்-நீர் கணவனைக் காப்பாற்றும் காணும் நானிலம் பரதனுக்கு அல்ல என்னப் போமோ நானிருந்தரசனைப் பொய் சொல்லச் சொல்லல் ஆமோ (வனம்) |