92 3. ஒருபிள்ளை ராமன்பர லோகசா தகம் செய்ய ஒருபிள்ளை பரதனிந்த உலகம் தன்னையாள இருபிள்ளை யாலும் கைகை இகபரம் பெற்றாள் என்ன வருசொல் உண்டாச்சு தென்ன மாதவம் செய்தேனோ (என்) -0-0-0- ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் விருத்தம்-10 இப்படிச் சிறுதா யாரை இறைஞ்சியே அனுப்பிக் கொண்டு மைப்படி வண்ண ராமன் வந்துகோ சலையம் மைக்குத் தப்பில்லா தவ்வா றெல்லாம் தான்சொல்லக் கன்றைத் தேடி வெப்புறும் பசுப்போல் அன்னை விழுகின்றாள் அழுகின் றாளே. திபதை-4 முகாரி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. அய்யைய்யோ ரகுராமா-வனம் போக-தெய்வ சம்மதியாமா-உனைநான் எவ்வகை பிறிவேனோ-நான் இனி செய்குவதறிவேனோ 2. என்ஒரு தாயகமே-ரவிகுல-மன்னவர் நாயகமே-அரசன் உன்னையும் வெறுத்தானோ-வெறுத்தும்-தன்னுயிர் பொறுத்தானோ 3. சுடர்மணி முடிபோச்சோ-தலைமேல்-சடைமுடி வரலாச்சோ-கேட்க உடல்பதறு தேமகனே-மனம்விட-விட உதறுதே மகனே 4. தாய்வரம் அதுகண்டு-பூமியை-காவல் பரதன் கொண்டு-ஆளட்டும் நீவனம் போவான்ஏன்-இப்படி-தீவினை ஆவான் ஏன் 5. கலியுகம் மேலிட்டதோ-சூரிய-குலமுறை போய்விட்டதோ-நீஇந்த நிலைமை விண்டிடலாமோ-பரதன்-தலைமை கொண்டிடலாமோ 6. எப்படி நான்சகிப்பேன்-உனைப்பிரிந்து எப்படிநிர்வகிப்பேன்-ராவினில் எப்படி கண்விழிப்பேன்-உயிர்கொண்டு-எப்படி நான்கழிப்பேன் |