பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது47


 

அளந்த திருத்தாளான் அன்றேற்ற கையான்
விளைந்த பொருள்காட்டும் மெய்யான்-உளங்கொண்
டிடந்த மருப்பினா னேந்து முதுகான்
படந்தனில் வைத்தமணிப் பாயான்-தொடர்ந்தவினை
முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோன் இகபரங்கள்-எட்டெழுத்தாற்

130 பிஞ்செழுத்தாய் நையும் பிரம லிபியெனும்பேர்
அஞ்செழுத்தை மூன்றெழுத் தாக்குவோன்-வஞ்சமறத்
தங்கள்குன் றெங்கிருந்துஞ் சங்கரன் ஆதியோர்
நங்கள்குன்றீ தென்னவரு நண்புடையோன்-அங்கோர்
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண்கொடுத்த கண்ணன்-நயமுரைக்கின்
அஞ்சுபடை யோனெனினும் அஞ்சாமல் அங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான்-எஞ்சாது
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன்-பண்ணிலங்கும்
135 ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போல்எவர்க்கும்
தாரணி நல்காத தம்பிரான்-காரணியும்
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான்-எங்கும்
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்கும்அர சீந்தோன்-விருப்பமுகம்
சந்திரன் ஆன சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசன்எனத் தோன்றினோன்-அந்தம்
சொலநலங்கொ டோள்அழகார் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன்-பலவிதமாய்
140 நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்-கண்அனைய
பாதகமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்