பக்கம் எண் :

48அழகர் கிள்ளைவிடு தூது


 

அரணாம் புயங்களுறும் அம்பரீ டற்குச்
சரணாம் புயங்கள் தருவோன்-திருநாளில்

 

கோடைத் திருவிழா

  சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற்-சிந்திக்கும்
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி-நீடுவிடைக்
 

தல்லாகுளம் வருதல்

145 குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரான் எழுந்தருளி-ஆடலுடன்
கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன்
தல்லா குளம்வந்து சார்ந்தருளி-மெல்ல
 

வையைக்கரைத் திருக்கண்களில் வைகுதல்





150
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்-சுரலோகத்
திந்திரவி மானமிது என்றும் இதுசோமச்
சந்திரவி மானமே தானென்றும்-முந்தியவட்
டாங்க விமானம் அவையிரண்டும் என்னவே
தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார்
உன்னி விமானம் உரத்தெடுக்கும் போதனந்தன்
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த - தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்
கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிரையா உதித்தவென-நீடிய