155 160 | பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க விற்கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச்-சொற்கத் தியலுங் கரியுமதி லெற்று முரசும் புயலும் உருமேறும் போலக் கயலினத்தை அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல் திருத்தகு மேகம்போற் செல்லுதலால் நீர்தூம் துருத்தி மழைபோற் சொரியக்-கருத்துடனே வாட்டமற வந்து வரங்கேட்கும் அன்பருக்குக் கேட்டவரம் ஊறுங் கிணறுபோல்-நாட்டமுடன் காணிக்கை வாங்க அன்பர் கைகோடி யள்ளியிடும் ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற் புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த |
| வண்டியூர் மண்டபம் வந்து தங்குதல் |
| வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி யூர்மண்ட பத்தி னுவந்திருந்து-சீர்மண்டு |
| ஆதிசேட வாகனத்திற் பவனி வருதல் |
165 | மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான் போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன் மருளப் பகலை மறைத்தவன் இப்போ திருளைப் பகல்செய்தா னென்னத்-தெருளவே அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற் றிங்கட் கடவுள்சே விப்பதுபோற்-கங்குற் கரதீப மும்வாணக் காட்சியுங் காண வரதீப ரூபமாய் வந்த-திருமால் அவனி பரிக்கும் அனந்தாழ்வான் மீது பவனிவரக் கண்டு பணிந்தேன் - அவனழகிற் |